1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Nilgiris collector introduced recycling machine in ooty

பிளாஸ்டிக் பாட்டிலுக்கு 5 ரூபாய் கேஷ்பேக் – நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு !

பேடிஎம்
பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்வதற்காக புதிய இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்காக  மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா  புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். உதகை மாவட்டத்தில் 5 இடங்களில் பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரங்கள் பொறுத்தியுள்ள அவர் அதில் பாட்டில்களை இடுபவர்களுக்கு கேஷ்பேக் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எந்திரத்தில் ஒவ்வொரு பாட்டிலை இடும்போதும் பேடிஎம் பயனாளர்களுக்கு கிரெடிட் பாயிண்ட கொடுக்கப்பட்டு ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ 5 வீதம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தொழில் நுட்ப வசதிகள் அந்த இயந்திரங் களில் செய்யப்பட்டுள்ளன.
அடுத்த கட்டுரையில்
இதோ கிளம்பிட்டாங்கல... விஜய் பேச்சுக்கு அதிமுக தரப்பில் எதிர் பேச்சு!