தொடர்புடைய செய்திகள்
- முதல்வரின் அமெரிக்க பயண தேதி அறிவிப்பு..! தொழில் முதலீடுகள் ஈர்க்க 15 நாட்கள் பயணம்..!
- சர்வதேச ட்ராபிக் சிக்னல் தினம்.! சென்னையில் ஹார்ட்டின் வடிவில் ஒளிரும் சிக்னல் விளக்குகள்.!!
- விளையாட்டுத் திடலில் விடுதி கட்டுவதா? போராட்டம் அறிவித்த பாமக தலைவர் அன்புமணி..!
- உதயநிதி துணை முதல்வரா.? முதல்வர் ஸ்டாலின் நச் பதில்.!
- வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணம் 100% அதிகமாக உயர்வு..! இரக்கமே இல்லையா? ராமதாஸ் கண்டனம்.!!
நெல்லை புதிய மேயராக கிட்டு தேர்வு.! 30 வாக்குகள் பெற்று வெற்றி..!!
திருநெல்வேலி மேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
திருநெல்வேலி மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து 25-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணனை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் வேப்புமனு தாக்கல் செய்த நிலையில், அவரை எதிர்த்து 6-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜ் போட்டியிட்டார். இன்று பிற்பகல் 12.30 மணிக்கு நெல்லை மேயர் தேர்தல் நடைபெற்றது.
மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் முதலில் 53 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதனிடையே முன்னாள் மேயராக இருந்த சரவணன் பிற்பகல் 12.10 மணிக்கு வாக்களிப்பதற்காக வந்தார். அப்போது அவரை அதிகாரிகள் உள்ளே அனுப்ப முடியாது என தெரிவித்தனர்.
தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் சில நிமிடமே உள்ள நிலையில் காலதாமதமாக வந்ததால் அனுமதிக்க முடியாது எனக் கூறி முன்னாள் மேயர் சரவணனை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான சுகபுத்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்த, அதன்பின் முன்னாள் மேயர் சரவணன் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதன்மூலம் திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 மாமன்ற உறுப்பினர்களில் 54 பேர் மறைமுக தேர்தலில் பங்கேற்றனர். அதிமுக மாமன்ற உறுப்பினர் ஜெகநாதன் மட்டும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தேர்தலில் அதிக வாக்கு பெற்று ராமகிருஷ்ணன் மேயராக தேர்வானார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பவுல்ராஜ் குறைவான வாக்குகளை வாங்கி தோல்வியுற்றார்.
ராமகிருஷ்ணன் 30 வாக்குகளும், பவுல்ராஜ் 23 வாக்குகளும் பெற்றனர். ஒரு செல்லாத வாக்கு பதிவாகியது. வெற்றியை அடுத்து ராமகிருஷ்ணனுக்கு வெற்றிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
