தொடர்புடைய செய்திகள்
- இன்று ஒரே நாளில் 32 மீனவர்கள் கைது. இலங்கை கடற்படை தொடர் அட்டகாசம்..!
- 10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்
- தேன் கூட்டில் கல் எறிய வேண்டாம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!
- CBSE விதிமுறைகளில் மாற்றம்.. மாநில அரசின் உரிமையை பறிக்கின்றதா மத்திய அரசு?
- மத்திய அரசை கண்டித்து மீண்டும் போராட்டம்.. திமுக அதிரடி அறிவிப்பு..!
மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை.. திமுக தான் அரசியல் செய்கிறது: டிடிவி தினகரன்
மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை என்றும், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தான் தேசிய கல்விக்கொள்கையில் அரசியல் செய்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டை தெரிவிக்கின்றன என்றும், தேசிய கல்விக் கொள்கை திட்டத்தின்படி மூன்றாவது ஒரு மொழியை கற்றுக் கொள்ளலாம் என்று தான் மத்திய அரசு கூறியுள்ளது என்றும், ஹிந்தியை மட்டும் தான் கற்க வேண்டும் என்று மத்திய அரசு எப்போதும் கூறவில்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
புதிய கல்வி கொள்கை மூலம் மூன்றாவதாக விருப்பப்படும் ஒரு மொழியை கற்கலாம் என்பது நல்ல கொள்கை தான் என்றும், கால சூழல் மாறுதலுக்கு ஏற்ப மூன்றாவது ஒரு மொழியை கற்றுக் கொள்வது நல்லது தான் என்றும் அவர் தெரிவித்தார்.
"நிதி தரமுடியாது என மத்திய அரசு கூறவில்லை" என்றும், "தேசிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்தினால் நிதி கிடைக்கும்" என்றும் டிடிவி தினகரன் இன்னொரு கேள்விக்கு பதில் அளித்தார்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
