1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Nalini parole extended to another one month

நளினிக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு! தமிழக அரசு உத்தரவு!

நளினி
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான நளினியின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி ஏற்கனவே பரோலில் வந்த நிலையில் அவருக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இரண்டாவதாக முறையாக நளினியின் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபோலவே பேரறிவாளனின் பரோலும் சில முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்… ஐநா தீர்மானத்தில் வாக்களிக்காத இந்தியா!