1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (16:39 IST)

மர்மமான முறையில் பெண் மரணம்...

தர்மபுரி மாவட்டம்  மொரப்பூர் பகுதியைச் சேர்ந்த பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சசியை ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் இந்திராணி இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகளுக்குத் திருமணமாகி கணவர் வெளி நாட்டில் வேலை செய்து வருகிறார்.

இந்திராணி தனது  மகள் ராஜேஷ்வரி வீட்டிற்கு மாலை 4 மணி அளவில் சென்றுள்ளார். அப்போது, ராஜேஷ்வரி கோயிலுக்கும் அவரது மகள் கல்லூரிக்குச் சென்றுள்ளதாகத் தெரிகிறது.

வீட்டில் தனியாக இருந்த இந்திராணி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.