தொடர்புடைய செய்திகள்
- ஹைட்ரோகார்பன் திட்டம்; உத்தரவை திரும்ப பெற வேண்டும்; மத்திய அரசை கண்டிக்கும் டிடிவி
- சிறார் ஆபாச பட விவகாரத்தில் சிக்கிய 600 பேர்..
- விவசாயியாக மாறிய எடப்பாடியார்!!.. புகழ்ந்து தள்ளும் துணை குடியரசு தலைவர்
- மன்னிப்பு கேட்காவிட்டால் வீடு முற்றுகை: ரஜினிக்கு பெரியார் திராவிட கழகம் எச்சரிக்கை!
- இதைதான் கருணாநிதி அன்றே சொன்னார்! திமுக – காங் குறித்து அமைச்சர் பாண்டியராஜன்!
நடைபாவாடை விரிப்பதை நிறுத்துங்கள்: அதிமுகவுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் சோதனை குழாய்கள் அமைக்க யார் உத்தரவும் தேவையில்லை என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுமாறு முக ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் சோதனை குழாய்கள் அமைக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதியோ, மக்களின் கருத்துகளோ தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு எதிராக விவாசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை சகாரா பாலைவனம் ஆக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு எப்படியாவது புகுத்தி விட முயற்சிப்பதாகவும், அதிமுக அரசு மத்திய அரசின் அனைத்து செயல்பாடுகளுக்கு நடைபாவாடை விரிப்பதை நிறுத்தி விட்டு இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
