தொடர்புடைய செய்திகள்
- ஏ.ஆர்.ரகுமான் மீது புகார் அளித்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர்.. என்ன காரணம்?
- பள்ளி, கல்லூரியில் சாதி தொடர்பான வன்முறை சம்பவங்கள்: கே.சந்துரு முக்கிய அறிவிப்பு..!
- நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன்? தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சரமாரி கேள்வி..!
- புகையிலை கடத்தல் வழக்கில் ரூ.25,000 அபராதம்.. அபராத தொகையில் புத்தகங்கள் வாங்க உத்தரவு..!
- சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு: அக்டோபர் 5ஆம் தேதி வரை சிறை..!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் மீண்டும் நீட்டிப்பு..நீதிபதி அல்லி உத்தரவு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் ஏற்கனவே ஆறு முறை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஏழாவது முறையாக நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னால் கைது செய்த நிலையில் தற்போது அவர் புழல் சிறையில் காவலில் உள்ளார்.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புழல் சிறையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை அக்டோபர் 13 வரை காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
