1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 31 டிசம்பர் 2022 (14:03 IST)

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 தொகை எப்போது? நிதி அமைச்சர் பழனிவேல் ராஜன் தகவல்

palanivel
தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் தரப்படும் என திமுக தரப்பிலிருந்து தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில் திமுக அரசு ஏற்பட்டு தற்போது சுமார் 2 வருடங்கள் ஆகியும் இன்னும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை 
 
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தொகை தருவது எப்போது என்பது குறித்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திமுகவின் கொடுத்த வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும் இந்த திட்டம் தொடர்பாக கணக்கெடுக்கும் பணி 85 சதவீதம் முடிந்துவிட்டது என்றும் 2023 பட்ஜெட்டில் இந்த தொகை குறித்த திட்டத்தை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran