1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 மே 2021 (13:39 IST)

அண்ணா பல்கலைகழகம் மீது புகார்; விரைவில் நடவடிக்கை! – உயர்கல்வி அமைச்சர் பொன்முடி!

அண்ணா பல்கலைகழக ஆன்லைன் தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதாக வந்துள்ள புகார் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒரு ஆண்டு காலமாக பள்ளி, கல்லூரிகள் செயல்படாத நிலையில் வகுப்புகள், தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக நடந்து வந்தன. இந்நிலையில் அண்ணா பல்கலைகழகமும் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்தியது. ஆனால் ஆன்லைன் தேர்வுகளில் குளறுபடிகள் நடந்துள்ளதாக மாணவர்கள் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி “மாணவர்களிடமிருந்து வந்த புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிப்பார்” என கூறியுள்ளார்.