வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 மே 2021 (11:15 IST)

மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி! – அதிதீவிர சிகிச்சை!

தமிழ் நடிகரும், அரசியல்வாதியுமான மன்சூர் அலிகான் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் நடிகரும், அரசியல்வாதியுமாக இருந்து வருபவர் மன்சூர் அலிகான். நாம் தமிழர் கட்சியில் இருந்த இவர் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக நா.த,கவிலிருந்து விலகி தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார். கட்சியை பதிவு செய்ய அவகாசம் இல்லாததால் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு டெபாசிட் இழந்தார்.

இந்நிலையில் சென்னையில் வசித்து வந்த மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.