1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 29 மார்ச் 2021 (08:22 IST)

திமுகவுக்காக 6 மணி நேரம் கடலில் மிதந்து பிரச்சாரம் செய்த மதிமுக தொண்டர்கள்!

திமுகவுக்காக 6 மணி நேரம் கடலில் மிதந்து பிரச்சாரம் செய்த மதிமுக தொண்டர்கள்!
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு 6 தொகுதிகள் கிடைத்துள்ளது இந்த ஆறு தொகுதிகளில் மட்டுமின்றி திமுக போட்டியிடும் தொகுதிகளிலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது கட்சியினரும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்
 
இந்த நிலையில் ராமேஸ்வரம் தொகுதிகளில் திமுகவுக்காக மதிமுக தொண்டர்கள் வித்தியாசமாக கடலில் மிதந்தபடி வாக்கு சேகரித்தனர். திமுக கொடி மற்றும் பதாகையுடன் ராமேஸ்வரம் கடல் பகுதியில் சுமார் 6 மணி நேரம் மிதந்தபடியே மதிமுக தொண்டர்கள் வாக்கு சேகரித்தனர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
மதிமுக தனித்து போட்டியிட்ட போதும் மக்கள் நல கூட்டணியுடன் போட்டியிட்ட போதும் கூட அந்த கட்சியின் தொண்டர்கள் இந்த அளவுக்கு இறங்கி வேலை செய்யவில்லை என்பதும் தற்போது திமுக கூட்டணிக்காக வேற லெவல் பிரசாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது