தொடர்புடைய செய்திகள்
- மணிப்பூர் விவகாரத்தால் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி.. 3வது நாளாக முடங்கிய பாராளுமன்றம்..!
- மணிப்பூர் பெண்கள் வன்கொடுமை; ஒரு போலி வீடியோதான் காரணம்? – வெளியான அதிர்ச்சி தகவல்!
- பெகாசஸ், பிபிசி ஆவணப்படம், மணிப்பூர்.. பாராளுமன்ற கூட்டத்திற்கு முந்தைய நாள் வெளியாகும் பிரச்சனைகள்: சதிக்கு பின் யார்?
- மணிப்பூருக்குள் என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள்: மகளிர் ஆணையத் தலைவி பேட்டி..!
- தமிழ்நாட்டுக்கு வந்து பயிற்சி செய்யுங்க! – மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் அழைப்பு!
மணிப்பூர் விவகாரம்.. சென்னை கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்..!
மணிப்பூரில் பெண்களுக்கு ஏற்பட்ட அநீதியை கண்டித்து சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கே நேர்ந்த கொடுரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்ற கூட்டம் 3 நாட்கள் ஸ்தம்பிக்கும் அளவுக்கு இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் மணிப்பூர் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் மணிப்பூர் சம்பவத்தை தாண்டித்தும் மத்திய அரசை கண்டித்தும் சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்
மேலும் கைகளில் பதாகைகளை ஏந்தி மாணவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
