தொடர்புடைய செய்திகள்
- மதுரை காமராஜர் பல்கலை மாணவி மர்ம மரணம்.. போலீசார் தீவிர விசாரணை..!
- தேசிய அளவிலான மலைப்பகுதி சைக்கிள் போட்டி - தங்கம் , வெள்ளி வென்ற மாணவி!
- சென்னை அடையாறு கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளின் போராட்டம் வாபஸ்!
- மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கலாஷேத்ரா ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும்! - சீமான்
- ’அவன் எனக்குதான்..!’ கும்பல் சேர்த்த மாணவிகள் குடுமிப்பிடி சண்டை!
சாதி பெயரை சொல்லி மாணவியை கிண்டல் செய்த பேராசிரியர் கைது: காமராஜர் பல்கலையில் பரபரப்பு..!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவியின் ஜாதியை சொல்லி கிண்டல் செய்த பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியின் ஜாதி பெயரை அந்த பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வரும் சண்முகராஜா என்பவர் சொல்லி கிண்டல் செய்ததாக தெரிகிறது. அதுமட்டுமின்றி அந்த மாணவியின் உருவத்தை வைத்தும் அவர் கேலி செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து வரலாற்று உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்த சண்முகராஜா என்பவர் மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாணவியை கிண்டல் செய்ததால் வரலாற்று பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
