தொடர்புடைய செய்திகள்
- லாலு கட்சி எம்.எல்.ஏ நாக்கை அறுத்தால் ரூ.10 லட்சம்.. இந்துத்துவா அமைப்பு அறிவிப்பு..!
- பொங்கல் பரிசு ரூ.500.. வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிப்பு..!
- ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்..! விண்ணப்பத்தில் கூடுதல் தகுதிகள் சேர்ப்பு!
- 8 தாசில்தார், 101 துணை தாசில்தார் பணியிடங்கள்.. தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு!
- நெல்லையில் ரூ.6,000 நிவாரணம் பெற இன்று கடைசி.. டோக்கன் பெற்றவர்களுக்கு அறிவிப்பு..!
வாடிவாசலை தெறிக்கவிடப்போகும் காளைகள்.. ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிப்பு..!!
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதிகளை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வருடந்தோறும் தைத்திங்களில் மதுரை மாவட்டத்தில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வருடமும் அவனியாபுரத்தில் திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள திடலில் 15-ஆம் (திங்கட்கிழமை) தேதியும், பாலமேடு பேரூராட்சியில் மஞ்சமலை ஆறு திடலில் 16-ஆம் (செவ்வாய் கிழமை) தேதியும் மற்றும் அலங்காநல்லூர் பேரூராட்சியில் கோட்டைமுனி வாசல் மந்தை திடலில் 17-ஆம் (புதன் கிழமை) தேதியும் நடைபெறவுள்ளது.
வருடந்தோறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பாரம்பரியமாக நடைபெறும் அந்தந்த இடங்களிலேயே இந்த வருடமும் சிறப்பாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பதிவு குறித்து சம்மந்தப்பட்ட துறையின் மூலமாக விரைவில் அறிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
