தொடர்புடைய செய்திகள்
- பிரதமரின் பார்வையெல்லாம் தமிழகம் மேலதான்! – கோவையில் யோகி ஆதித்யநாத் பேச்சு!
- நான் உயிரை விடுறதா சொல்லவேயில்லை.. அது போலியானது! – அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!
- ஏப்ரல் 4ஆம் தேதி எத்தனை மணி வரை பிரச்சாரம் செய்யலாம்? தேர்தல் ஆணையம் அறிவிப்பு
- தமிழகத்தில் பொதுமுடக்கம் ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு! – மாவட்ட நிர்வாகங்களுக்கு புதிய உத்தரவு!
- வெற்றிக்கான வேட்கையில் விஷமமான வார்த்தைகள்! – கமல்ஹாசன் மறைமுக கண்டனம்!
இலவசம் வழங்கும் கட்சிகளை ஏன் தடை செய்யக் கூடாது? – மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி!
தமிழக சட்டமன்ற தேர்தலில் இலவசங்கள் வழங்குவதாக அறிவிக்கும் கட்சிகளை தேர்தல் ஆணையம் ஏன் தடை செய்யக்கூடாது என மதுரை கிளை நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் “இலவசங்கள் வழங்கி மக்களை சோம்பேறியாக்காமல் நல்ல திட்டங்களை அறிவிக்க வேண்டும். சமூக நல திட்டம் என்ற பெயரில் இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளை தேர்தல் ஆணையம் ஏன் தடை செய்யக்கூடாது?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் “பிரியாணி, மதுபாட்டிலுக்காக மக்கள் தங்கள் வாக்குகளை விற்பனை செய்கிறார்கள். வாக்குகளை விற்பனை செய்தால் நல்ல அரசியல் தலைவர்களை மக்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்?” என்று நீதிபதிகள் கேட்டுள்ளனர்.
