தொடர்புடைய செய்திகள்
- பல்லக்கில் தூக்கி செல்லப்படும் போப்: ஸ்டாலின், திருமாவளவனுக்கு பாஜக பிரமுகர் கேள்வி
- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 1,627 கோடி ரூபாய் ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் தகவல்
- எங்களை எதிர்த்தா சாலையில் நடமாட முடியாது! – அமைச்சர்களுக்கு மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை!
- ஆதீன பட்டினபிரவேச நிகழ்ச்சி… முதல்வர் முடிவெடுப்பார்..! – அமைச்சர் சேகர்பாபு!
- மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ஆக ரத்தினவேல் மீண்டும் நியமனம் !
என் உயிருக்கு ஆபத்து.. பிரதமரிடம் செல்வேன்! – மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி!
தருமபுர ஆதீன பட்டிண பிரவேசம் குறித்து கண்டனம் தெரிவித்து பேசிய மதுரை ஆதீனத்திற்கு கொலை மிரட்டல் வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தருமபுர ஆதீனம் பட்டண பிரவேச நிகழ்ச்சி மே 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அன்று ஆதீனத்தை பல்லக்கில் மனிதர்கள் தூக்கி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் பட்டிண பிரவேசத்தில் பல்லக்கு தூக்க தடை விதிக்கப்பட்டது குறித்து மதுரை ஆதீனம் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் ஆளுனர் சமீபத்தில் தருமபுர ஆதீனம் சென்று வந்ததையடுத்து அரசியல் நோக்கோடு இந்த தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் தற்போது தனக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும், இதுதொடர்பாக தான் பிரதமரிடம் சென்று முறையிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
