தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்..? – கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு!
- சென்னை எம்.ஐ.டியில் 46 மாணவர்களுக்கு கொரோனா! – கல்வி நிறுவனம் மூடல்!
- 12 தமிழக மீனவர்களுக்கு விடுதலை – இலங்கை நீதிமன்றம் உத்தரவு!
- கஞ்சா கடத்தல்; சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது..! – வெளிநடப்பு செய்த எடப்பாடியார் கண்டனம்!
- பொங்கல் சிறப்பு பேருந்துகள்; 60 ஆயிரம் பேர் முன்பதிவு! – திட்டமிட்டபடி இயங்குமா?
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு; மேலும் சில கட்டுப்பாடுகள்!– அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனால் சில உடனடி கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில் தற்போது பேட்டியளித்துள்ள மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு விதிக்கப்பட உள்ளதால், சனிக்கிழமைகளில் இனி கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும். பள்ளி, கோவில்கள் உள்ளிட்ட பகுதிகளில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் அறிவிப்பார்” என தெரிவித்துள்ளார்.
