1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 3 ஆகஸ்ட் 2019 (19:40 IST)

ஸ்டாலினை களத்தை விட்டு வெளியேற்றுவோம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழக முதல்வர் எடப்பாடி ஆட்சியில் யாரேனும் தப்பு செய்தால், அவர்கள் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை உடையும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இன்று தமிழக பால்வளத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,கேவி. குப்பம் சட்டமன்ற பகுதி தேர்தல் பொறுப்பாளராக அவர் இருக்கிறார். இந்நிலையில்   வேலூர் மக்களவை தொகுதியில், அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏசி சண்முகத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்து, மக்களிடம் வாக்குகள் வாக்குகள் சேகரித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது :
 
முதல்வர் எடப்பாடி மட்டும் கண் அசைத்தால் போதும்,  ஸ்டாலினை களத்தை விட்டு வெளியேற்றுவோம். நேற்றைய பிரசாரத்தில் ஸ்டாலினை எதையுமே கொடுக்காமல் குற்றம் சொல்லியே பெயர் வாங்கிவருகிறார். திமுக மட்டும்தான் ரவுடி கட்சியா நாங்களும் எல்லாத்தையும் பார்த்துவிட்டு வந்துள்ளோம்.. என்று தெரிவித்தார்.
 
இந்நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி : திமுக கட்சியினர் என்ன சொன்னாலும் இந்த அரசாங்கமும் நாட்டு மக்கள் கேட்க வேண்டும் என்பது எழுதாத விதியாக உள்ளது. சட்டம் தன் கடமையை செய்யும். அதிமுக கட்சியினர் தப்பு செய்தால் வழுக்கி  விழுந்து கை உடைந்து விடும் ! திமுக கட்சியினர் தப்பு செய்தாலும் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை உடைந்து விழும்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் யாரும் தப்ப முடியாது என்று தெரிவித்தார். அவரது பேச்சு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.