தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் உயரும் தங்கம் விலை; 40 ஆயிரத்தை நெருங்குகிறது!
- கலகலக்கும் அரசு பள்ளி அட்மிசன்கள்! – கொண்டாட்டத்தில் அரசு பள்ளிகள்!
- பாஜக கூட்டத்தில் ரௌடிகள் – கைது செய்யப்பட்டு அதிரடி நடவடிக்கை!
- தேமுதிக இல்லைனா எந்த கட்சியும் இல்லை! – தேர்தல் குறித்து பிரேமலதா விஜயகாந்த்
- பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்கு! – விதிமுறைகளை மீறியதாக புகார்!
அமைச்சர்களுக்கு தனி சட்டமா? வழக்கு போடுங்க! – நியாயம் கேட்கும் எல்.முருகன்!
ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் மீது வழக்குப்பதியப்பட்டுள்ள நிலையில் தமிழக அமைச்சர்கள் மீதும் வழக்கு பதிய வேண்டும் என அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் பாஜக மாவட்ட அலுவலகம் திறக்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். அலுவலக திறப்பு விழாவில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாகவும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல்.முருகன் “அதிமுக அமைச்சர்களும் மற்ற பிற கட்சி பிரமுகர்களும் கூட மாவட்டம் தோறும் சென்று கூட்டங்களை நடத்துகிறார்கள். வழக்கு பதிவதென்றால் அவர்கள் மீதும்தான் பதிய வேண்டும்” என கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் பாஜக முன்னை விட மிகவும் பலமாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
