தொடர்புடைய செய்திகள்
- குஷ்பு இல்லத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் தடுத்து நிறுத்தம்: போலீசார் குவிப்பு..!
- நடிகை குஷ்புவை கண்டித்து அவரது இல்லம் அருகே நாளை ஆர்பாட்டம் - காங்கிரஸ்
- பெண் பத்திரிகையாளர் குறித்த அவதூறு: எஸ்.வி.சேகர் மீதான வழக்கு முடித்து வைப்பு..!
- காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு கேரண்டி கிடையாது.. சீன பொருட்கள் மாதிரி: அமித்ஷா கிண்டல்..!
- கே.சி.ஆரை டார்கெட் செய்து அடிக்கும் காங்., பாஜக! – தெலுங்கானாவில் தாக்கு பிடிக்குமா பிஆர்எஸ்?
மன்னிப்பு கேட்க முடியாது.. தைரியம் இல்லாத கட்சி காங்கிரஸ்: குஷ்பு
நான் தவறு செய்யவில்லை என்றும் அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறிய குஷ்பு தனித்துப் போட்டியிட தைரியம் இல்லாத கட்சி காங்கிரஸ் என்றும் விமர்சனம் செய்தார்.
சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் அவர் நடிகை தாழ்த்தப்பட்ட மக்களை அவதூறு செய்து விட்டதாக காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து இன்று காங்கிரஸ் கட்சியினர் குஷ்புவின் வீட்டை முற்றுகையிட முயற்சித்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த குஷ்பூ, நான் தவறு செய்யவில்லை அதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறினார். மேலும் தமிழ்நாட்டுக்கு வந்தது முதல் தமிழ் பெண்ணாகவே வாழ்ந்து வருகிறேன் என்றும் தமிழ் கலாச்சாரங்கள் எனக்கு நன்றாக தெரியும் என்று கூறினார்.
மேலும் தமிழ்நாட்டில் தனித்துப் போட்டியிட தைரியம் இல்லாத ஒரே கட்சி காங்கிரஸ் தான் என்றும் விமர்சனம் செய்தார்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
