ஜீப்லி புகைப்படம் உருவாக்குகிறீர்களா? காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை..!
உலகம் முழுவதும் ஜீப்லி புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ள நிலையில், இந்த புகைப்படங்களை உருவாக்குவதில் மிகுந்த கவனம் தேவை என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு செயலிகள் மூலம் ஜீப்லி கார்ட்டூன் படங்களை உருவாக்குவதில் மிகுந்த கவனம் தேவை என திருநெல்வேலி மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், சாமானிய மக்கள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு செயல்கள் மூலம் ஜூப்லி புகைப்படங்களை தங்களது சமூக வலைதளங்களில் பதிவேற்றி கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய ஓவிய படங்களை டவுன்லோட் செய்வது ஆபத்தானது எனவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து திருநெல்வேலி மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஜீப்லி புகைப்படமாக மாற்றும் செயலியில் புகைப்படங்களை பதிவேற்றினால் உங்கள் ஒப்புதல் இல்லாமல் AI உங்களுடைய முகத்தை பயன்படுத்தலாம். உங்கள் புகைப்படங்களை பதிவேற்றும் முன் தனியுரிமையை சரிபார்க்கவும்.
Edited by Siva