வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (17:05 IST)

மீண்டும் திறக்கப்பட்ட கோயம்பேடு உணவு தானிய சந்தை.. காய்கறி சந்தை எப்போது?

நான்கரை மாதங்களுக்குப் பின் கோயம்பேடு உணவு தானிய சந்தை இன்று திறக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு தானிய கிடங்கு இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மே மாதத்தில் இருந்து கோயம்பேடு மார்க்கெட் முழுவதுமாக மூடப்பட்டது. இந்நிலையில் இப்போது சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில் மீண்டும் இன்று முதல் உணவு தானியக் கிடங்கும், 28 ஆம் தேதி முதல் காய்கறி மார்க்கெட்டும் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.