தொடர்புடைய செய்திகள்
- பிரதமர் மோடியின் சித்தி கொரோனாவால் பலி! – குஜராத்தில் சோகம்!
- கூவாகம் திருவிழா ரத்து! நேரில் சென்று வழிபாடு நடத்தும் திருநங்கைகள்!
- மீண்டும் முதலிடத்துக்கு வந்த ஆர் சி பி! இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்ட சி எஸ் கே!
- இனி இந்தியில் பேச முடியாது… தோனி சொல்ல ஜடேஜா சிரிக்க ஒரே கூத்துதான்!
- அறிகுறி இல்லாமல் வரும் ஆபத்து! – இந்திய வைரஸால் உலக நாடுகள் அதிர்ச்சி!
கொரோனா நோயாளிகள் எக்கச்சக்கம்.. செவிலியர்கள் குறைவு! – கோவை மருத்துவ கல்லூரியில் போராட்டம்!
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையில் கோவை மருத்துவ கல்லூரியில் கூடுதல் செவிலியர்களை நியமிக்க கோரி போராட்டம் நடந்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் கவனிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், ஆனால் அதற்கேற்ற அளவு செவிலியர்கள் இல்லை என்பதால் தற்போது பணிபுரியும் செவிலியர்களுக்கு பணிச்சுமை கூடுதலாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என செவிலியர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
அடுத்த கட்டுரையில்
