தொடர்புடைய செய்திகள்
- தூய அன்னை மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்;சீறிப்பாய்ந்த மாடுகள் .
- நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி....விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த ஒருவர் கைது
- சென்னை அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: போராடும் தீயணைப்பு வீரர்கள்
- காதல் மற்றும் ஆக்சன் த்ரில்லரான வேழம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
உயிருக்கு போராடிய பூனைக்குட்டியை தீயணைப்பு வீரர்கள்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தனியார் திருமண மண்டபத்திற்குள் சிக்கி உயிருக்கு போராடிய பூனைக்குட்டியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்....
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளாண்டிவலசு பகுதியில் உள்ள ஸ்ரீ வன்னியர் குல சத்ரிய திருமண மண்டபத்தின் மாடியில் பூனை குட்டி ஒன்று மாட்டிக்கொண்டு இறங்க வழியின்றி சத்தமிட்டு உள்ளது. இதனை அறிந்த அந்த வழியாக வந்த சிறுவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து திருமண மண்டபத்திற்கு வந்த தீயணைப்பு துறையில் வீரர்கள் மாடியில் சிக்கித்தவித்த பூனையை பத்திரமாக மீட்டு பூனை உரிமையாளரிடம் கொடுத்துச் சென்றனர். ஒரு பூனை குட்டி என்று பாராமல் அதன் உயிரை காப்பாற்றிய தீயணைப்புத்துறை வீரர்களை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
