தொடர்புடைய செய்திகள்
- விருப்பத்தை மீறி திருமணம் செய்த காதல் ஜோடிகள்! – நைஸாக பேசி வரவழைத்து நடத்திய கொடூரம்!
- சுந்தர் சி தொல்லையால் பாஜகவில் குஷ்பு? கொளுத்தி போட்ட கோபண்ணா!
- குஷ்பூவை நாங்க நடிகையாதான் பாத்தோம்.. டோண்ட் வொரி! – கேஷுவலாய் கடந்த கே.எஸ்.அழகிரி!
- காங்கிரஸ் கட்சியில் நடிகை குஷ்பூவின் பதவி பறிப்பு
- லைக்குக்கும் லவ்வுக்கும் வித்தியாசம் இருக்கு... ட்விட் போட்டு திணறடிக்கும் குஷ்பு!
என்னை அடக்கி ஒடுக்கினார்கள்.. ராகுல் காந்திக்கு நன்றி! – மனம் திறந்த குஷ்பூ!
தமிழக காங்கிரஸ் கமிட்டியிலிருந்து நடிகை குஷ்பூ விலகியுள்ள நிலையில் தான் விலகியதற்கான காரணங்களை தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டியில் இருந்து வந்த நடிகை குஷ்பூவிற்கும், காங்கிரஸ் கமிட்டியினருக்கும் சில காலமாக முரண்பாடுகள் ஏற்பட்டு வந்தன. இந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைவதாக அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸிலிருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தையும் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார்.
அதை தொடர்ந்து தான் ஏன் காங்கிரஸிலிருந்து விலகுகிறார் என விளக்கம் அளித்துள்ள அவர் “பணம் புகழை பெறுவதற்காக நான் காங்கிரஸில் இணையவில்லை. கட்சியில் உயர் பதவியில் இருப்பவர்களும், மக்களால் அங்கீகரிக்கப்படாத சிலரும் என்னை அடக்கி ஒடுக்க முயன்றார்கள். நீண்ட யோசனைக்கு பிறகே இந்த முடிவை எடுத்துள்ளேன். காங்கிரஸில் எனக்கு வாய்ப்பளித்த ராகுல் காந்திக்கும், மற்றவர்களுக்கும் நன்றி” என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
