1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Karur court order prisonment for a abuser

சிறுமியை வன்கொடுமை செய்த 40 வயது ஆசாமி! – 20 ஆண்டுகள் சிறை தண்டனை!

Tamilnadu
கரூரில் பள்ளி சென்ற சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கரூரில் கடந்த 2019ம் ஆண்டு பள்ளி சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த 3ம் வகுப்பு படிக்கும் மாணவியை 40 வயதான சரவணன் என்ற நபர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வழக்கு கரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் குற்றபாளியான சரவணனுக்கு 20 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
வெளியான அதிமுக வேட்பாளர் பட்டியல் - ஷாக்கில் பாஜக