தொடர்புடைய செய்திகள்
- வேகமெடுக்கும் கொரோனா; தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வம்!
- முகக்கவசத்துக்கு 200, எச்சில் துப்பினா 500 அபராதம்! – சென்னையில் புதிய உத்தரவு!
- பொதுமக்களுக்கு உதவ அனுமதி தாங்க; தேர்தல் ஆணையத்திடம் திமுக கோரிக்கை!
- முக கவசம் அணியாவிட்டால் கட்டாயம் அபராதம்! – கோவை மாநகராட்சி கறார்!
- தொடர்ந்து உயரும் தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன?
கேரள குப்பைகளை தமிழகத்தில் கொட்டுவதா? – கமல்ஹாசன் கண்டன ட்வீட்!
கேரள மருத்துவ கழிவுகளை தமிழக எல்லையில் கொட்டுவதாக நீண்ட நாளாக இருந்து வரும் புகார் குறித்து கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரளாவிலிருந்து கோழி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளை சிலர் தமிழக எல்லை பகுதியில் கொட்டி செல்வது போன்ற புகார்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. இதுகுறித்து அவ்வபோது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் முறைகேடாக இது போல குப்பைகளை கொட்டும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் “கேரளத்தில் இருந்து வரும் மருத்துவக் கழிவுகளை பொள்ளாச்சிக்கு அருகே உள்ள தோட்டத்தில் குழி தோண்டி புதைத்திருக்கிறார்கள்.இது பல ஆண்டுகளாக நடந்துவருகிறதாம். சூழலை அழிக்கும் சமூகவிரோத செயல்களைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை. இரு மாநில அரசும் இதை உடனடியாகக் கவனிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
