தொடர்புடைய செய்திகள்
- ''நெஞ்சம் பதைபதைக்கச் செய்யும் இந்த வீடியோ...முதல்வரின் கனவத்திற்கு''- கமல்ஹாசன் டுவீட்
- கடும் குடிதண்ணீர் தட்டுப்பாடு.. காலி குடங்களுடன் முற்றுகையிட்டுள்ள கிராம மக்கள்..!
- மணிப்பூர் விவகாரம்: பாஜக கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி..!
- பாஜகவுக்கு ஓட்டு முக்கியமே தவிர மனிதர்கள் முக்கியமல்ல- ம.நீ,ம பொதுச்செயலாளர் அருணாச்சலம்
- மணிப்பூரில் மீண்டும் வெடித்தது வன்முறை.. 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதட்டம்..!
மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: கட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்த கமல்ஹாசன்..!
மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்த நிலைஇல் கட்சியின் நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தலைநகர் சென்னையில் பொதுச்செயலாளர் அருணாச்சலம் தலைமையிலும், காஞ்சிபுரத்தில் துணைத்தலைவர் மெளரியா தலைமையிலும், கோயம்புத்தூரில் துணைத்தலைவர் தங்கவேல் தலைமையிலும், மதுரையில் இளைஞரணி மாநிலச் செயலாளர் கவிஞர் சினேகன் தலைமையிலும்,சேலத்தில் மாநிலச் செயலாளர் சிவா இளங்கோ தலைமையிலும், நாகப்பட்டினத்தில் பொறியாளர் அணி மாநிலச் செயலாளர் வைத்தீஸ்வரன் தலைமையிலும், திருநெல்வேலியில் நெல்லை மண்டலச் செயலாளர் மருத்துவர் D. பிரேம்நாத் தலைமையிலும், திட்டக்குடியில் விழுப்புரம் மண்டலச் செயலாளர் ஸ்ரீபதி தலைமையிலும் நடந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட மய்ய உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.
வன்முறையைக் கட்டுப்படுத்த இயலாத மணிப்பூர் மாநில அரசை உடனடியாகக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அங்கு அமல்படுத்தவேண்டும். இரு தரப்பிற்கும் நம்பிக்கை தரக்கூடிய தலைவர்களைக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும்.
இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran
