1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kamal Hassan says about MNM conference

பழிபோடும், பழிவாங்கும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கமல்ஹாசன்

கமல்ஹாசன்
பழி போடும் மற்றும் பழிவாங்கும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.
 
பழி போடும் அரசியல் மற்றும் பழிவாங்கும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வழிதேடும் அரசியல் மற்றும் வழிகாட்டும் அரசியலுக்கு துவக்க உரையை சேர்ந்து எழுத வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 
மேலும் மக்கள் நீதி மய்யத்தின் 4வது ஆண்டு தொடக்க விழா பிப்ரவரி 21ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்றும் இதற்காக சென்னையில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 
மண்ணையும் மொழியையும் மக்களையும் காக்க தொண்டர்கள் இந்த மாநாட்டிற்கு அணிதிரள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மாநாட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட ஒரு சில பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
காசு கேட்டு மிரட்டிய கடத்தல்காரர்கள்; கண்டுகொள்ளாத உறவினர்கள்! – கடற்படை அதிகாரிக்கு நிகழ்ந்த சோகம்!