1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 27 நவம்பர் 2021 (18:27 IST)

சு வெங்கடேசனை ஒருமையில் பேசியதற்கு மன்னிப்புக் கேட்ட கே என் நேரு!

மதுரை எம்பி சு வெங்கடேசனை ஒருமையில் பேசியதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார் திமுக அமைச்சர் கே என் நேரு.

மதுரை ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைச்சரிடம் மதுரை எய்ம்ஸ் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு எரிச்சலாக பதிலளித்த நேரு ‘சம்பந்தப்பட்டவர்களை விட்டு விட்டு என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள். வெங்கடேசன்னு ஒரு ஆளு இருக்கான். அந்தாளுட்ட கேளுங்க. எங்கிட்ட கேட்கிறீங்க’ எனக் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை ஒருமையில் பேசியது கண்டனங்களை எழுப்பியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், நேருவை கண்டிக்கும் விதமான அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து நேரு ’பாராளுமன்ற  உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன் அவர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும்; பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தப் படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்.’ என வருத்தம் தெரிவித்துள்ளார்.