தொடர்புடைய செய்திகள்
- 325 கோடி செலவில் மூன்று மருத்துவக்கல்லூரிகள்! – மத்திய அரசு அனுமதி!
- அடுத்த 4 நாட்களுக்கு வெளுத்து வாங்க போகுது மழை..
- அஜித் கட்சி போஸ்டர் விவகாரம்: மன்னிப்பு கேட்ட ரசிகர்!
- எல்லா பிரச்சினைகளுக்கும் பெண்களே காரணம்! – பாக்யராஜ் சர்ச்சை பேச்சு!
- சாக்கடை கழிவுகளை திறந்துவிட்டால் 1 லட்சம் அபராதம்! – சென்னை மாநகராட்சி
முக ஸ்டாலின் ஒரு ”இம்சை அரசன்”…பொங்கும் ஜெயகுமார்
தமிழகத்தின் இம்சை அரசன் முக ஸ்டாலின் தான் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் மத்திய அரசோ அல்லது மாநில அரசோ எந்த திட்டம் கொண்டு வந்தாலும் திமுக அதனை எதிர்த்து வந்துள்ளது. குறிப்பாக நீட் தேர்வை அமல்படுத்தியதற்கு திமுக பெரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், தமிழகத்தின் இம்சை அரசன் முக ஸ்டாலின் தான். எந்த திட்டத்தையும் செயல்படவிடாமல் தடுக்கிறார்” என விமர்சித்துள்ளார்.
மேலும் “நீட் தமிழகத்திற்கு தேவையில்லாதது, நீட் தேர்வை ரத்து செய்யுமாறு தொடர்ந்து குரல் கொடுப்போம்” எனவும் கூறியுள்ளார். முன்னதாக நீட் தேர்வு குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என அதிமுகவினர் கூறிவரும் நிலையில் தர்போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லாதது என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
