1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (12:22 IST)

எருமை மாடு திராவிடர்களா? சீமான் பேச்சுக்கு ஜெயகுமார் காட்டம்!

கருப்பாக இருப்பவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்றால் கருப்பாக இருக்கும் எருமை மாடு திராவிடர்களா என சீமான் பேசியதற்கு ஜெயக்குமார் கண்டனம். 

 
இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் திராவிடர்கள் குறித்து கேள்வி எழுப்பிய போது கருப்பாக இருப்பவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்றால் ஆப்பிரிக்காவில் உள்ள அனைவரும் திராவிடர்களா?  கருப்பாக இருக்கும் எருமை மாடு திராவிடர்கள் என்று பதில் கேள்வி எழுப்பினார். 
 
ஒரு மனிதனுக்கு ஏன் இத்தனை முகமூடி போடுகிறீர்கள் என்றும் திராவிடர்கள், இந்தியர்கள், தமிழர்கள் என பல்வேறு முக அடையாளம் எதற்கு நாம் தமிழர்கள் என்று கூறுவதற்கு தயங்குவது ஏன்? என்றும் எதற்காக திராவிடர்கள் என்று கூற வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 
 
இந்நிலையில் இதனைத்தொடர்ந்து திராவிடர்களை எருமையுடன் ஒப்பிட்டு சீமான் பேசியது கண்டிக்கத்தக்கது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.  ஒட்டுமொத்த திராவிடர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் சீமான் கருத்து உள்ளதாக சென்னையில் ஜெயக்குமார் பேட்டியளித்தார்.