1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 4 ஜனவரி 2022 (17:04 IST)

2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டால்.... அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம்

தென்னாப்பிரிக்கவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு  நாடுகளுக்கு  ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே கொரொனா இரண்டாவதுஅலை பரவி வரும் நிலையில் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. 

 தமிழகத்தில் கொரொனா தொற்றைக் குறைக்க தமிழக அரசு பல்வேறு  நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் எனவும் பெரிய அளவில் பதட்டப்பட வேண்டியதில்லை எனத் தெரிவித்துள்ளார்.