வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : சனி, 7 மார்ச் 2020 (18:47 IST)

மனிதநேயம் இன்னும் இறக்கவில்லை...வாகனம் விபத்துக்குள்ளானபோது ... வைரலாகும் வீடியோ

மனிதநேயம் இன்னும் இறக்கவில்லை...வாகனம் விபத்துக்குள்ளானபோது ... வைரலாகும் வீடியோ

விபத்து நேர்ந்து வாகனம் மற்றும் அதில் சென்ற மனிதர்களுக்கு காயம் ஏற்பட்டால் உடனே மருத்துவமனையில் சேர்க்கும் மனிதநேயம் நம்மிடம் இன்னும் அருகிப்போகவில்லை; சில நாட்களுக்கு முன் ஆட்டோவில் தவறவிட்ட  பணத்தை ஆட்டோ ஓட்டுநர் போலீஸாரிடம் ஒப்படைத்தார். இதுபோல் அன்றி சில சமயங்களில் இதற்கு எதிர்மாறாகவும் நடக்கும்!
 
அந்த வகையில் வட மாநிலத்தில் ஒரு இடத்தில் கோழியை ஏற்றி வந்த  வாகனம் விபத்துக்குள்ளானது. அப்போது அருகில் உள்ள கிராமத்து மக்கள், விரைந்து வந்து அந்த வானத்தைப் பற்றிக் கவலைப்படாமல் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த கறிக்கோழிகளை குண்டுக்கட்டாகத தூக்கிச்சென்றனர். 
 
இதுகுறித்து ஒருவர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
 
மனிதநேயம் இன்னும் இறக்கவில்லை. Crying faceCrying face வாகனம் விபத்துக்குள்ளானபோது, அருகிலுள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் வாகனத்தைத் திறந்து பயணிகளை தங்கள் சொந்த வீடுகளுக்கு அழைத்துச் சென்று கவனித்துக்கொண்டனர். என்று பதிவிட்டுள்ளார்.