தொடர்புடைய செய்திகள்
- போலி நிறுவனத்தில் முதலீடு செய்து 4 கோடியை இழந்த டிராவிட்
- பார்சலில் செல்போனுக்கு பதில் பொம்மையை அனுப்பி நூதன முறையில் மோசடி
- திருடர்களுக்கு குறிப்பு கொடுத்த வீட்டு உரிமையாளர்
- முகநூல் வழியாக ஆண்களுடன் பழகி பல கோடி ஏமாற்றிய இளம்பெண்
- 5 லட்சம் ரூபாய் கடனுக்காக 65 லட்சம் மதிப்பிலான நிலத்தை அபகரித்த பைனான்சியர்
ஒரே வீட்டை 7 பேருக்குக் காட்டி 70 லட்சம் வரை மோசடி; வீட்டு உரிமையாளர் கைது
திருப்பூரில் ஒரே வீட்டை 7 நபர்களுக்கு காட்டி 70 லட்சம் ரூபாய் மோசடி செய்த வீட்டு உரிமையாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மக்களின் பணம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்படும் சம்பவம், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கு அவினாசி பிச்சம்பாளையம் லக்கி நகரில், ஒரு சொந்த வீடு இருக்கிறது. முத்துக்குமார் தன் வீட்டை லீசுக்கு விடுவதாக கூறி, குமார் என்பவரிடமிருந்து ரூ. 7 லட்சத்தை பெற்றுள்ளார். குமார் முத்துக்குமாரிடம் நான் தான் பணம் கொடுத்துவிட்டேனே, வீட்டின் சாவியை கொடுங்கள் என்று கேட்டதற்கு வீட்டில் வாடகைக்கு இருப்பவர்கள் இன்னும் வீட்டை காலி செய்ய வில்லை. அவர்கள் காலி செய்த பின்னர் நீங்கள் குடியேறலாம் என்று கூறி காலம் கடத்தி வந்தார்.
இதனால் சந்தேகமடைந்த குமார், முத்துக்குமார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் முத்துக்குமாரை பிடித்து விசாரித்ததில் ஒரே வீட்டை, பலருக்கு காட்டி 70 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் முத்துக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
