1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy rain is expected in the next 2 hours! – In which districts

கொளித்தும் வெயிலில் காத்திருக்குது செம மழை! – எந்தெந்த மாவட்டங்களில்?

Chennai Rain
கோடைவெயில் பல பகுதிகளையும் வாட்டி வரும் நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் கோடைக்கால வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முதலாக அக்கினி நட்சத்திரம் தொடங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. கோடைக்காலத்தில் பெய்யும் கோடைமழையின் அளவு கடந்த ஆண்டை விட குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று ஒருசில மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
விவசாய நிலங்களையும், இந்து கோவில்களையும் யானை வழித்தடமாக மாற்ற முயற்சி! - தொண்டாமுத்தூர் விவசாயிகள் கண்டனம்!