1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 நவம்பர் 2023 (10:16 IST)

கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை: நிலச்சரிவால் ஐயப்ப பக்தர்கள் பாதிப்பு..!

தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் கனமழை பெய்து வருவதாகவும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் ஐயப்ப பக்தர்கள்  பாதிப்பு அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

வடகிழக்கு பருவமழை காரணமாக கேரளாவில் கடந்த சில வாரங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, இடுக்கி, எர்ணாகுளம், வயநாடு போன்ற மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர் விடுக்கப்பட்டுள்ள நிலையில் திருவனந்தபுரம் உட்பட பல சுற்றுலா தளங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பத்தினம்திட்டா, மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள  பொதுமக்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பத்தினம்திட்டா வழியாக செல்லும் ஐயப்ப பக்தர்களும் பாதிப்படைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன

Edited by Mahendran