தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
- யூடியூபர் TTF வாசன் மீது போலீஸார் வழக்குப் பதிவு
- விநாயகர் சதுர்த்தி தினத்தில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
- தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. கோவில்களில் குவியும் பக்தர்கள்..!
- விநாயகர் சதுர்த்தி; எகிறிய பூக்கள் விலை! எந்த பூ என்ன விலை?
காஞ்சிபுரத்தில் கனமழை.. விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் மக்களுக்கு சிக்கல்..!
காஞ்சிபுரத்தில் தற்போது கனமழை பெய்து வருவதை அடுத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பொது மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இன்று மதியத்திற்கு மேல் தான் விநாயகர் சதுர்த்தி தொடங்குவதால் மாலையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட மக்கள் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் திடீரென காஞ்சிபுரம் பகுதியில் தற்போது கன மழை பெய்து வருவதால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட முடியாமல் மக்கள் சிக்கலில் உள்ளதாக தெரிகிறது. மேலும் விநாயகர் கோவிலுக்கும் மழை காரணமாக செல்ல முடியாத நிலை உள்ளது.
ஏற்கனவே சென்னை உள்பட ஏழு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் இன்று மாலை முதல் இரவு வரை என் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
எனவே மக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி விநாயகரை வழிபடுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
