1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 8 அக்டோபர் 2021 (15:09 IST)

அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை!

அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை!
தமிழகத்தில் உள்ள ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவக் காற்று மற்றும்  வெப்பச்சலனம் காரணமாக இன்று  தமிழகத்தில் வட மாவட்டங்கள் மற்றும் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் எனவும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த 2 நாட்களுக்கு மாநிலத்தில் நீலகிரி, கோவை, புதுக்கோட்டை, ஈரோடு, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளதாகவும் கூறியுள்ளது.