1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 26 நவம்பர் 2021 (08:57 IST)

கனமழை எச்சரிக்கை: மின்சார வாரியத்தில் இருந்து ஒரு அறிவிப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் இன்று கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி பலரு மாவட்டங்களில் நேற்று இரவு முதலே மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கிறது. 
 
இந்நிலையில் மக்கள் நடந்து செல்லும்போது மின்சார வயர் எதுவும் கீழே விழுந்திருந்தால் அப்பகுதியில் கவனமாக செல்லவேண்டும் என மின்சார வாரியத்தில் இருந்து  எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும்,  transformer அருகில் செல்லவேண்டாம் எனவும்  மின்கம்பங்களில் ஒயர் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தால் உடனே மின்சார வாரியத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டிய அவசர  தொலைபேசி எண்  9498794987 உள்ளிட்டவரையும் வெளியிட்டு மக்களை பாதுகாப்புடன் இருக்க வலியுறுத்தியுள்ளனர்.