தொடர்புடைய செய்திகள்
- ஆசிரியர்களை கைது செய்வதா? தகுந்த பாடம் புகட்டுவார்கள்: டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை..!
- வலுவடைந்தது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி., 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!
- ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு.. மக்கள் சக்தியுடன் விரைவில்.. ஆதவ் அர்ஜூனா வெளியிட்ட வீடியோ..!
- தாமதமாகிறதா காற்றழுத்த தாழ்வு: இந்திய வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
- தி.மு.க. பைல்ஸ்-3 வெளியிடப்படும்.. கூட்டணி கட்சிகள் எடுத்த டெண்டர்களும் உண்டு: அண்ணாமலை..!
வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு: நாளை 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளதை அடுத்து, நாளை ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில், அது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகளை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, நாளை ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,
கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, மேற்கண்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Mahendran
