தொடர்புடைய செய்திகள்
- ஜனவரி 26 குடியரசு தினத்தன்று சென்னை புறநகர் ரயில் அட்டவணையில் மாற்றம்!
- சென்னையில் டிரோன், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை: 5 அடுக்கு பாதுகாப்பு
- ட்ரோன்கள் பறக்க தடை; டெல்லிக்குள் நுழையும் பீரங்கிகள்! – குடியரசு தின பாதுகாப்பு தீவிரம்!
- டெல்லி செல்லும் ரெயில்களில் பார்சல் சேவை திடீர் நிறுத்தம்..! என்ன காரணம்?
- பட்டியலின மக்கள் கொடியேற்றுவதில் பிரச்சினை! – தலைமைச்செயலர் கடிதம்!
நமது ராணுவத்துக்கு வணக்கம் செலுத்துவோம்: கவர்னர் ரவி குடியரசு தின வாழ்த்து!
நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தி கூறியிருப்பதாவது:
நமது ராணுவத்துக்கு வணக்கம் செலுத்துவோம்; பாரத இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை காத்து, எதிரி நடவடிக்கைகளை முறியடித்து இன்னுயிரை தியாகம் செய்த தீரம் மிக்க நம் வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது
வ.உ. சிதம்பரம், மகாகவி சுப்பிரமணிய பாரதி, வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், விருப்பாச்சி கோபால் நாயக்கர், சுப்பிரமணிய சிவா, அழகுமுத்து கோன், வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை, வீரபாண்டிய கட்டபொம்மன், ஆகியோருக்கு நெஞ்சார்ந்த மரியாதையை செலுத்துவோம் - ஆளுநர் ரவி
இந்த நிலையில் சட்டமன்றத்தில் நடந்த பிரச்சனையை அடுத்து இன்று ஆளுநர் ரவி மற்றும் முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோர் நேருக்கு நேர் தேநீர் விருந்தில் சந்திக்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
