தொடர்புடைய செய்திகள்
- டிஜிபி சஸ்பெண்ட் உத்தரவு ரத்து.. தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி..!
- முதல்வர் ஸ்டாலின், அண்ணாமலை, உதயநிதி, கமல்ஹாசன்: ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து..!
- கர்நாடக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய்கள் வரவழைப்பு..!
- பெரியார் பெயரை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதா? முதல்வர், உதயநிதி கண்டனம்..!
- கலாநிதிமாறன் ரூ.5 கோடி நிவாரண நிதி
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரம்: முதல்வருக்கு அழைப்பு விடுத்த கவர்னர் ரவி..!
நிலுவையில் இருக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் ஆலோசனை செய்ய முதல்வருக்கு கவர்னர் ரவி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாக்களுக்கு அனுமதி வழங்காமல் கவர்னர் இழுத்தடித்து வருகிறார் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் கவர்னருக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தது. \
இந்த நிலையில் நிலுவையில் இருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரம் குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தாலும் புயல் நிவாரண பணிகள் முடிந்ததும் வருவதாக முதலமைச்சர் தரப்பில் பதில் கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
