தொடர்புடைய செய்திகள்
- நாளை பேருந்துகள் இயங்கும் - அமைச்சர் சிவசங்கர்
- பேச்சுவார்த்தை தோல்வி: நாளை முதல் போராட்டம்-போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
- பொங்கலுக்கு பேருந்துகள் ஓடுமா? ஓடாதா.. இன்று முக்கிய பேச்சுவார்த்தை.. !
- நடத்துனர் மீது துறை ரீதியாக நடவடிக்கை- போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்
- திமுக அரசின் தொழிலாளர் நலன் விரோதப் போக்கையே வெளிக்காட்டுகிறது-டிடிவி. தினகரன்
இன்று நள்ளிரவு முதல் பேருந்துகள் ஓடாது: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
அரசுடன் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து நாளை முதல் போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சார்பில் நாளை முதல் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொழிற்சங்க சங்க நிர்வாகிகள் இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் பேருந்துகள் ஓடாது என்றும் அறிவித்துள்ளனர்.
சிஐடியு சௌந்தர்ராஜன் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது தொலைதூரம் செல்லக்கூடிய பேருந்துகள் இன்று நள்ளிரவு 11:59 மணி வரை மட்டுமே இயங்கும் என்றும் நள்ளிரவு 12 மணிக்கு மேல் எந்த பேருந்தும் ஓடாது என்றும் தெரிவித்துள்ளார்.
நீண்ட தூரம் செல்லும் பேருந்துகள் நாளை காலை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று பயணிகளை இறக்கி விட்ட பின் நிறுத்தி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வேலை நிறுத்தத்தில் அனைத்து தரப்பினரும் உறுதியாக உள்ளனர் என்றும் கண்டிப்பாக எங்கள் போராட்டம் வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran
