1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Free masks will be given to ration card holders from today

ரேஷன் கடைகளில் இன்று முதல் இந்த பொருளும் இலவசம்!

ரேஷன் கடை
தமிழக அரசின் உத்தரவு படி இன்று முதல் ரேஷன் கடைகளில் இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட இருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து, ரேஷன் கடைகளில் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மக்கள் பொது இடங்களுக்கு சென்றால் பாதுகாப்பாக இருக்க முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழக அரசே இலவசமாக மக்களுக்கு மாஸ்க்குகள் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன் படி இன்று முதல் ரேஷன் கடைகளில் மாஸ்க்குகள் வழங்கப்பட இருக்கின்றன. ஒரு நபருக்கு 2 மாஸ்க்குகள் என்ற விகிதத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மாஸ்க்குகள் வழங்கப்பட இருக்கின்றன.
அடுத்த கட்டுரையில்
அரசு மருத்துவமனையில் சேர 50 ரூபாய் லஞ்சம்! வைரலாகும் வீடியோ!