1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 27 ஜூலை 2022 (19:52 IST)

அமலாக்கத்துறையில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜர்: 4 மணி நேரம் விசாரணை

Periyasamy
அமலாக்கத் துறை அலுவலகத்தில் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராகி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாபர் சேட்டுக்கு வீடு ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை முன் அமைச்சர் ஐ.பெரியசாமி விசாரணைக்காக ஆஜராகி உள்ளார் 
 
அமைச்சர் ஐ.பெரியசாமி இடம் நான்குமணி நேரமாக அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் இந்த விசாரணையின் முடிவில் பல திருப்பங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது
 
அமலாக்கத் துறை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜராகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது திமுக அமைச்சர் ஒருவரும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது