ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (20:04 IST)

பெண்குழந்தைகள் பெயரில் நிலையான வைப்புத் தொகை!

பெண் குழந்தைகளின் பெயரில் நிலையான வைப்புத் தொகை வைக்கப்படும் என தமிழ்க அரசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பெண் குழந்தை 1.08.2011 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்து இருந்தால் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத் தொகையாக ரூ.50 ஆயிரம் வைக்கப்படும் எனவும், 1.08.2011 க்கு முன்பு பிறந்த ஒரு பெண் குழ்ந்தைக்கு ரூ.25,000 வழங்கப்படும் எனவும், இரண்டு பெண் குழந்தைகள் இருப்பின் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் அவர்களுக்கு என நிலையான வைப்பு தொகை என தலா ரூ.25000 வைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.