தொடர்புடைய செய்திகள்
- பெண் எஸ்.ஐ வீடியோ சர்ச்சை- கட்டாயக் காத்திருப்பில் கோவை ஜெயராமன்
- டுவிட்டரில் தொடங்கினால் என்ன? கோவையில் தொடங்கினால் என்ன? கமல் அரசியல்
- இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது சேப்பாக் கில்லிஸ் அணி
- தூத்துக்குடி அணியுடன் இறுதிப்போட்டியில் மோதுவது யார்? சேப்பாக்-கோவை இன்று பலப்பரிட்சை
- சீட் பெல்ட் அணிந்ததால் உயிரை விட்ட பிரபல தொழிலதிபர்
இடிந்து விழுந்த சோமனூர் பேருந்து நிலையம்; 5 பேர் பலி
தொடர் மழை காரணமாக விரிசல் விட்டிருந்த கோவை சோமனூர் பேருந்து நிலைய கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளர்.
கோவை சோமனூர் பேருந்து நிலைய கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 20 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக தெரிவித்துள்ளனர். மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமனூர் பேருந்து நிலையம் மோசமாக நிலையில் இருப்பதாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பே ஊர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொள்ளவில்லை. இதனிடையே கடந்த சில நாட்களாக கோவையில் மழை தொடர்ந்து பெய்தது. இதனால் விரிசல் விட்டிருந்த கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்தது.
அடுத்த கட்டுரையில்
