1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Five dead in Bus Stand Building Collapsed at Coimbatore

இடிந்து விழுந்த சோமனூர் பேருந்து நிலையம்; 5 பேர் பலி

கோவை
தொடர் மழை காரணமாக விரிசல் விட்டிருந்த கோவை சோமனூர் பேருந்து நிலைய கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளர். 


 

 
கோவை சோமனூர் பேருந்து நிலைய கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 20 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக தெரிவித்துள்ளனர். மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சோமனூர் பேருந்து நிலையம் மோசமாக நிலையில் இருப்பதாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பே ஊர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொள்ளவில்லை. இதனிடையே கடந்த சில நாட்களாக கோவையில் மழை தொடர்ந்து பெய்தது. இதனால் விரிசல் விட்டிருந்த கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்தது.
அடுத்த கட்டுரையில்
நீட் தேர்வுக்கு எதிராக அரசு வேலையை தூக்கி எறிந்த ஆசிரியை...