39 வருடங்களுக்கு பின் முக ஸ்டாலின் இல்லாத சட்டசபை!.. திமுகவினர் சோகம்!..
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெகவுக்கு தேவையான ஆதரவு கிடைத்ததையடுத்து அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதன்பின் செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனே உள்ளிட்ட தவெக அமைச்சர்களும் பதவியேற்றனர்.
அதன் பின் இன்று சட்டப்பேரவை கூடியது. அப்போது தவெக தலைவர் விஜய் பெரம்பூர் எம்எல்ஏவாக பதவியேற்றுகொண்டார். அவரைத் தொடர்ந்து தவெக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து பதவியேற்றனர். மேலும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இது திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இன்று சட்டப்பேரவை துவங்கிய நிலையில் முக ஸ்டாலின் அங்கே இல்லை.
1989க்கு பிறகு முதல்முறையாக முக ஸ்டாலின் இல்லாத சட்டப்பேரவை இன்று கூடியது திமுக தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 39 வருடங்களில் சட்டமன்றத்தில் ஸ்டாலின் இன்றி அவை நடப்பது இதுவே முதல் முறை என்பதால் திமுக எம்.எல்.ஏக்கள் முகத்தில் ஒருவிதமான சோகம் நிலவியது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இது திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இன்று சட்டப்பேரவை துவங்கிய நிலையில் முக ஸ்டாலின் அங்கே இல்லை.
1989க்கு பிறகு முதல்முறையாக முக ஸ்டாலின் இல்லாத சட்டப்பேரவை இன்று கூடியது திமுக தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 39 வருடங்களில் சட்டமன்றத்தில் ஸ்டாலின் இன்றி அவை நடப்பது இதுவே முதல் முறை என்பதால் திமுக எம்.எல்.ஏக்கள் முகத்தில் ஒருவிதமான சோகம் நிலவியது.
