வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 24 பிப்ரவரி 2020 (18:54 IST)

மாடியில் இருந்து குதித்து மகளுடன் தந்தை தற்கொலை !

சென்னை மாதவரம்  அருகே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் என அருகில் இருப்பவர்களால் அழைக்கப்படுவர் , தனது 4 வயது மகளுடன் மாடியில் இருந்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை மாதவரம் அருகேயுள்ள பொன்னியமன்மேடு நகரில் வசித்து வந்தவர் திருப்பதி ரெட்டி. இவர் சமீக காலமாகவே மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கான அவர் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகத் தெரிகிறது.
 
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் வீடு திரும்பிய திருப்பதி, மன நலத்திற்கான மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவில்லை என தெரிகிறது. அதனால் , இன்று தனது மகளை மாடிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து தனது மகளுடன் குதித்துத் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.